இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023 வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது

  • முன்மாதிரி திட்டத்திற்கு 85 சதவீத நிதியுதவியை மார்ட்டின் அறக்கட்டளை வழங்கியது
  • நாடு முழுவதும் 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக (PICO)செயற்கைக்கோள்கள் சவுண்ட் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது
    சென்னை, பிப்ரவரி 19, 2023: இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து பிப்ரவரி 19-ம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (கூடுதல் பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார்.
    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ-ISRO) முன்னாள் விஞ்ஞானியும், இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் (ஐ.எஸ்.ஏ.சி.-(ISAC)) மற்றும் இந்திய ரிமோட் சென்சிங் மற்றும் சிறிய ரக, அறிவியல் மற்றும் மாணவர்களுக்கான செயற்கைகோள்கள் (IRS&SSS) திட்ட இயக்குநருமான பத்மஸ்ரீ ஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் மேகலிங்கம், மார்ட்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr.Rtn எம்.லீமா ரோஸ் மார்ட்டின், மார்ட்டின் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் Dr.ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை- ஹவுஸ் ஆஃப் கலாம், ராமேஸ்வரம் நிர்வாக அறங்காவலர் ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர், அப்துல் கலாம் பேரன்களும், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை- ஹவுஸ் ஆஃப் கலாமின் இணை நிறுவனர்களான ஏ.பி.ஜெ.எம்.ஜெ. ஷேக் தாவூர், ஏ.பி.ஜெ.எம்.ஜெ. ஷேக் சலீம் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
    மார்ட்டின் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம் மற்றும் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களால் சவுண்ட் ராக்கெட் வடிவமைத்து உருவாக்கப்பட்டது. மேலும் வெவ்வேறு பே லோட்களை கொண்ட சிறிய ரக 150 செயற்கைக்கோள்களும் தயாரிக்கப்பட்டன.
    இத்துடன் 100 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் மறு பயன்பாட்டு ராக்கெட் (reusable rocket) தயாரிக்கப்பட்டுள்ளது. இதர மாணவர்கள் செயற்கைக்கோள்களை உருவாக்கினர். சவுண்ட் ராக்கெட்டில் இருந்து ஏவப்படும் இந்த செயற்கைக்கோள்களில் இருந்து வானிலை மற்றும் வளிமண்டல நிலை மற்றும் கதிர்வீச்சு தன்மை குறித்து ஆராய்ச்சி தகவல்களை பெற முடியும்.

  • மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023 வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    இந்தியா முழுவதும் இருந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 3500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டும் கிடைக்கும் அரிய வாய்ப்பில் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மீனவ சமூகத்தைச் சேர்ந்த 200 மாணவர்களும், இந்தியா முழுவதும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 60 பழங்குடியின மாணவர்களும் அடங்குவர்.

  • மும்பை மாநகராட்சி 20 மாணவர்களையும், நாக்பூர் மாநகராட்சி 10 மாணவர்களையும் அளித்தன. மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தின் ஐ.ஏ.எஸ் திருமதி ஆஞ்சல் சூட் கோயல், 50 அரசு பள்ளி மாணவர்களை வழங்கினார். மேலும், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மட்டுமின்றி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பற்றியும் கற்றுக் கொண்டனர்.
    தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் ஏவும் திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக, மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தை வெகுவாகப் பாராட்டினார்.
    மார்ட்டின் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் Dr ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசுகையில், விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டம் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போது மாணவர்கள் விண்வெளி அறிவியலில் தங்களின் அறிவை மேம்படுத்தி கொள்ளவும், தங்களது எதிர்கால வேலைவாய்ப்பை தேர்ந்தெடுக்கும் சிந்தனையைப் பெறும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிகளவிலான விஞ்ஞானிகள் கிடைக்க விரும்புகிறேன். மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக ஊக்கமளித்து இத்திட்டத்தைச் சாத்தியப்படுத்தியதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
    இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி Dr மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், செயற்கைக்கோள் சார்ந்த தொழில்துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவ சமுதாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேவேளையில் முதலாவது ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் விண்ணில் ஏவியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருமித்த கருத்து கொண்டவர்களின் கனவு இந்த சாதனையை நிஜமாக்கி உள்ளது. உலக அரங்கில் இந்தியா விண்வெளி அறிவியலில் வேகமாக முன்னேறி வரும் நாடாக உள்ளது. எனவே, ஆர்வமிக்க துடிப்புமிக்க இளைஞர்கள் இந்த துறைக்கு அதிகளவில் வர வேண்டும் என்றார்.
    மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் Dr.Rtn எம்.லீமா ரோஸ் மார்ட்டின் பேசுகையில், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் ஹைபிரிட் ராக்கெட் ஏவும் திட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் மார்ட்டின் அறக்கட்டளை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. எங்கள் குழு மேற்கொண்ட தீவிர முயற்சிக்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக விண்வெளி அறிவியலில் பயிற்சி பெறுவதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நாங்கள் மாணவர் சமுதாயம் முன்னேற்றம் அடையவும், போதிய அறிவைப் பெறவும் இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து நடத்திட திட்டமிட்டுள்ளோம் என்றார்.
  • ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் மேகலிங்கம் பேசுகையில், இத்திட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதிலும், எளிதாக கருத்துகளை உள்வாங்கி கொண்டதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டியதை மனதார பாராட்ட வேண்டும். மேலும் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலால், மாணவர்கள் கடுமையாக உழைத்து இத்திட்டத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டியுள்ளனர் என்றார்.
    மறைந்த குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் அண்ணன் மகளும், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை-ஹவுஸ் ஆஃப் கலாம், ராமேஸ்வரத்தின் நிர்வாக அறங்காவலருமான ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர் பேசுகையில், மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மாண்புகளை முன்னெடுத்து செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு குடும்ப உறுப்பினராக இந்த நிகழ்வை பெருமையாகக் கருதுகிறேன். அனைவரும் சமத்துவமான கல்வி வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற அப்துல்கலாம் கண்ட கனவை நனவாக்குவதில் ஒரு சிறிய அடியை முன்னே எடுத்து வைத்துள்ளோம். இந்தியா விண்வெளி அறிவியல் திட்டம் வலிமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளை நடத்திட வேண்டும் என்றார்

Leave a Reply

Your email address will not be published.